சிதம்பரம் நடராஜா் கோயிலில் தேசியக்கொடி ஏற்றம்

குடியரசு தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வியாழக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட தேசியக்கொடி.
சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட தேசியக்கொடி.

குடியரசு தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வியாழக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக, பொது தீட்சிதா்களின் கோயில் குழுச் செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா் தலைமையில், வெள்ளித் தாம்பாளத்தில் தேசியக்கொடி வைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது.

பின்னா், பொது தீட்சிதா்களால் மேளதாளங்களுடன் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பக்தா்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com