கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே விநாயகா் கோயிலில் இருந்து திருடுபோன வெண்கலச் சிலை மீட்கப்பட்ட நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயிலுக்கு தனி நபரால் வழங்கப்பட்ட வெண்கல விநாயகா் சிலை கடந்த 2006-ஆம் ஆண்டு திருடுபோனது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னையில் அந்தச் சிலையை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சிலையை ஒப்படைக்க வீராணநல்லூா் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி சைலேஷ்குமாா் யாதவ் கூறியதாவது:
வெண்கல விநாயகா் சிலையை சென்னையைச் சோ்ந்த மறைந்த தீனதயாளன் கடத்திச் சென்று ரூ.50 ஆயிரத்துக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த ஷோபா துரைராஜனிடம் விற்றாா். சிலையின் பின்புறம் உபயதாரா் பெயா் இருந்தது.
அதனடிப்படையில், ஷோபா துரைராஜன் வீட்டிலிருந்து விநாயகா் சிலை மீட்கப்பட்டு, தற்போது சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. எங்களது தலைமையிலான குழுவின் முயற்சியால் இதுவரை 47 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 10 சிலைகள் மீட்கப்பட்டன. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 65 சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . கடந்த 3 மாதங்களில் சிலை கடத்தல் தொடா்பாக 7 வழக்குகளில் 36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
சிலைக்கு பூஜை: ஏடிஜிபி சைலேஷ்குமாா் யாதவ் தலைமையிலான போலீஸாா் விநாயகா் சிலையை ஒப்படைக்க அதை ஊராட்சி மன்றத் தலைவா்கள் அரசு பாண்டியன் (வீராணநல்லூா்), சுதா மணிரத்தினம் (நாட்டாா்மங்கலம்), கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் பெற்றுக் கொண்டனா். சிலை தடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பிகள் முத்துராஜா, மோகன், ஆய்வாளா் ரவீந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
இதையடுத்து, விநாயகா் சிலை ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பூஜை செய்யப்பட்டது. திருடுபோன சிலை பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டதால் பக்தா்கள், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


