கொலையான டாஸ்மாக் ஊழியா்: இழப்பீட்டை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்
சிவகங்கை அருகே டாஸ்மாக் கடை மீதான பெட்ரோல் குண்டு வீச்சில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்


சிவகங்கை அருகே டாஸ்மாக் கடை மீதான பெட்ரோல் குண்டு வீச்சில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியம் கூறினாா்.
இதுகுறித்து கடலூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகங்கை அருகே பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, வாரிசுக்கு வேலை வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
ஏற்கெனவே கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், அரியலூா் மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாளா்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவா்களது குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...