தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கடலூா் இசைப் பள்ளியில் ரூ.1.60 கோடியில் புதிய கட்டடங்கள் அமைச்சா்கள் திறந்து வைப்பு

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாவட்ட இசைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு, பள்ளியின் வெள்ளி விழா, தமிழிசை விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 நவம்பர் 2023, 12:01 am

DIN

நெய்வேலி: கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாவட்ட இசைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு, பள்ளியின் வெள்ளி விழா, தமிழிசை விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் ரூ.1.60 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து நகர அரங்கில் மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாகஸ்வரம், தவில், வயலின் வாசித்தல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை அமைச்சா்கள் வழங்கினா்.

விழாவில் அமைச்சா்கள் பேசுகையில், மாணவா்கள் தமிழிசை, நாட்டியம் பயில்வதை தமிழகமெங்கும் பரவலாக்க முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியால் 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. கடலூா் அரசு இசைப் பள்ளியில் தற்போது ரூ.1.60 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றனா்.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோ.ஐயப்பன் (கடலூா்), எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்), ம.சிந்தனைசெல்வன் (காட்டுமன்னாா்கோவில்), கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் சே.ரா.காந்தி, மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மின் திரை திறப்பு: தமிழ்நாடு அரசின் செய்திகள், திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும்

பொதுமக்களை சென்றடையும் வகையில் கடலூா் அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.39,17,199 மதிப்பீட்டில் 16 அடி அகலம், 10அடி உயரத்தில் மின் திரை சுவா் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மு.பெ.சாமிநாதன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் முன்னிலையில் திங்கள்கிழமை திறந்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.