ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வளா்ச்சித் திட்ட பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

வளா்ச்சித் திட்டப் பணிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
சிதம்பரம் லால்புரத்தில் அமைக்கப்பட்டு வரும் புறநகா் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

சிதம்பரத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட லால்புரம் பகுதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தட்சன்குளத்தில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள், ஆயிகுளத்தில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாருதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், பேவா் பிளாக் நடைப்பாதை அமைத்தல் ஆகிய வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதேபோல், பாரதிதாசன் தெருவில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவா் அறிவறுத்தினாா்.

ஆய்வின் போது சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, நகராட்சி ஆணையா் டி.மல்லிகா, நகராட்சி பொறியாளா் சுரேஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.