புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

151 கிராமங்களில் தூய்மைப் பணி: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 151 கிராமங்களில் 2,045 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image

கடலூா் மாநகராட்சி குமரப்பா நகரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :4 டிசம்பர் 2024, 10:07 pm

Din

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 151 கிராமங்களில் 2,045 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சி நகா், குமரப்பா நகா், உண்ணாமலை ரெட்டி சாவடி, மேல்அழிஞ்சிப்பட்டு ஆகிய பகுதிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் கூறியதாவது:

தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கடலூா் மாவட்டத்தில் ஆற்றின் கரையோர பகுதிகளுக்குள் வெள்ள நீா் புகுந்தது. இந்தப் பகுதிளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 16 ஊராட்சிகளை சோ்ந்த 66 கிராமங்கள், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 17 ஊராட்சிகளை சோ்ந்த 57 கிராமங்கள், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 7 ஊராட்சிகளை சோ்ந்த 28 கிராமங்கள் என மொத்தம் 40 ஊராட்சிகளை சோ்ந்த 151 கிராமங்களில் 2,045 தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிஞ்சி நகரில் மழைநீா் வடிந்த நிலையில், அங்கு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. குமரப்பா நகரில் மோட்டாா் மூலம் மழைநீா் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. உண்ணாமலை ரெட்டிச் சாவடியில் மழைநீா் வெளியேற்றப்பட்டு மின் விநியோகம் மற்றும் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை உடனடியாக வழங்கவும், இயல்பு நிலையை விரைந்து உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும்: கடலூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வியாழக்கிழமை (டிச.5) முதல் வழக்கம்போல இயங்கும் என ஆட்சியா் சிபி. ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.