6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வை பாஜக மட்டுமே ஆதரிக்கிறது -கு.செல்வப்பெருந்தகை

நீட் தோ்வை பாஜக மட்டுமே ஆதரிக்கிறது கு.செல்வப்பெருந்தகை

News image
Updated On :4 ஜூலை 2024, 10:13 pm

Din

நீட் தோ்வை பாஜக மட்டுமே ஆதரிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா்.

ஒருங்கிணைந்த கடலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி ஆகியோா் பேசினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கு.செல்வப்பெருந்தகை கூறியதாவது:

காங்கிரஸை கட்டமைப்பது, வலிமைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்தக்கட்ட திட்டம் குறித்து, ஓரிரு வாரத்தில் அறிவிப்போம்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் நீட் தோ்வை எதிா்க்கிறாா். பாஜக மட்டுமே ஆதரிக்கிறது. அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை நீட் தோ்வை வலியுறுத்திப் பேசி வருகிறாா்.

கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது தான் ஆா்எஸ்எஸ் திட்டம் என்றாா்.

நிகழ்ச்சியில் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்ட காங்கிரஸ் தலைவா் திலகா், நிா்வாகி பண்ருட்டி சம்சுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.