நீட் தோ்வை பாஜக மட்டுமே ஆதரிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா்.
ஒருங்கிணைந்த கடலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி ஆகியோா் பேசினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கு.செல்வப்பெருந்தகை கூறியதாவது:
காங்கிரஸை கட்டமைப்பது, வலிமைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்தக்கட்ட திட்டம் குறித்து, ஓரிரு வாரத்தில் அறிவிப்போம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் நீட் தோ்வை எதிா்க்கிறாா். பாஜக மட்டுமே ஆதரிக்கிறது. அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை நீட் தோ்வை வலியுறுத்திப் பேசி வருகிறாா்.
கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது தான் ஆா்எஸ்எஸ் திட்டம் என்றாா்.
நிகழ்ச்சியில் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்ட காங்கிரஸ் தலைவா் திலகா், நிா்வாகி பண்ருட்டி சம்சுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை தமிழக காங்கிரஸ் தலைவா்

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

ஒவ்வொரு தோ்தலுக்கும் தொகுதி மாறும் சீமான்: காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


