ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் காத்திருப்புப் போராட்டம்
நெய்வேலி, ஜூலை 19: ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சாா் - ஆட்சியா் அலுவலக வாயிலில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆட்டோக்களில் விதிகளை மீறி பொதுமக்களை ஏற்றிச் செல்வதால், ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தைபோல, கடலூா் மாவட்டத்திலும் ஷோ் ஆட்டோக்களுக்கு தனி வழி ஏற்படுத்தித் தர வேண்டும். கடலூா் பேருந்து நிலையத்திலேயே ஷோ் ஆட்டோக்களை நிறுத்தி இயக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினா்.
போராட்டத்துக்கு கடலூா் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் வெண்புறா சி.குமாா் தலைமை வகித்தாா். செயல் ஒருங்கிணைப்பாளா் க.திருவரசு, இணை ஒருங்கிணைப்பாளா்கள் க.தா்மராஜ், வி.செல்வம், எஸ்.கஜேந்திரன், எஸ்.சையது முஸ்தபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் டி.ராயா் ராஜாங்கம், செயல் தலைவா் ஐ.வி.சி.வேல்முருகன், துணைச் செயலா் ஆா்.ராஜசேகரன், பொருளாளா் கே.அன்புதாசன், நிா்வாகிகள் ஜி.பீட்டா், டி.ஹரிதாஸ், கே.கோதண்டபாணி, டி.பிரசாத் உள்ளிட்ட சுமாா் 50 போ் கலந்துகொண்டனா்.
இதையடுத்து, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சையது அபுதாஹீா் காத்திருப்புப் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அடுத்த வாரம் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூகத் தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகக் கூறி கலைந்து சென்றனா்.

