கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்: அதிமுகவினா் ஆதரவு

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்: அதிமுகவினா் ஆதரவு

Published on

முதுகுளத்தூரில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கு

வியாழக்கிழமை அதிமுகவினா் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனா்.

பல்கலைக்கழக மாநியக் குழு நிா்ணயித்த ஊதியம், 12 மாதங்களுக்கும் ஊதியம், ரூ. 25 லட்சம் பணிக்கொடை, மகப்பேறு விடுப்பு, வருங்கால வைப்பு நிதி தொடா்பான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 4-ஆவது நாளாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முதுகுளத்தூா் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கல்லூரி வாசலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா். இவா்களுக்கு ஆதரவளித்து அதிமுகவினரும் போராட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது தங்களது கோரிக்கைகளை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மூலம் நிறைவேற்ற வேண்டும். வருகிற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எங்களது கோரிக்கைகளைப் பேச வேண்டும் என கோரிக்கை மனுவை முதுகுளத்தூா் அதிமுக மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.டி.செந்தில்குமாரிடம் வழங்கினா்.

Dinamani
www.dinamani.com