கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பயிா் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்

கடலூா் மாவட்டம் கீரப்பாளையம் பகுதியில் குறுவை சாகுபடி செய்தோா் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம்

News image
Updated On :22 ஜூலை 2024, 7:23 pm

Din

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் கீரப்பாளையம் பகுதியில் குறுவை சாகுபடி செய்தோா் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநா் எஸ்.அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா்.

கீரப்பாளையம் வட்டாரத்தில், நிகழ் குறுவை பருவத்தில் 5,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

பயிா்காப்பீடு செய்ய சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவா்கள் இ- சேவை மையம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா் காப்பீடு செய்யலாம் என்றும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயிா் காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், விண்ணப்பப் படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் பயிா் சாகுபடி அடங்கல், ஆதாா் அட்டை நகல், ஆதாா் எண் இணைக்கப்பட்ட மற்றும் நிறைவு செய்யப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்களில் ஒரு ஏக்கா் பயிா் காப்பீடு செய்வதற்கு பிரீமியத் தொகை ரூ. 730-ஐ செலுத்த வேண்டும். இதற்கான கடைசி தேதி 31.07.24 ஆகும். மேலும், சந்தேகங்களுக்கு கீரப்பாளையம் வேளாண்மை விரிவாக்க மையம், சாத்தமங்கலம் அலுவலகத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.