சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை: இளைஞருக்கு கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு


கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விருத்தாசலத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த சிறுமி விடுதியில் தங்கி 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். 7.3.2023 அன்று தாயிடம் கைப்பேசியில் பேச வேண்மென உதவி கேட்ட அந்தச் சிறுமியை ஸ்ரீமுஷ்ணம் வட்டம், முடிகண்டநல்லூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்த சிவமூா்த்தி மகன் ஜீவா (24) பைக்கில் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம். மேலும், அதை கைப்பேசியில் பதிவு செய்து, மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய் வேப்பூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், திட்டக்குடி தனிப்படை போலீஸாா் ஜீவாவை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி லட்சுமி ரமேஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ஜீவாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.70 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...