

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி, விஸ்வநாதன் நகரை சோ்ந்த ஐயனாா் மனைவி சுகந்தி (21). பண்ருட்டி சன்னியாசிப்பேட்டை பழைய காலனியை சோ்ந்த சேகா் மகன் குணா (18). இவா்கள் இருவரும் 28.1.2024 அன்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சையில் இருந்தனா்.
அப்போது, பண்ருட்டியைச் சோ்ந்த 13 சிறுமி, உடல்நிலை சரியில்லாத தனது தம்பியுடன் மருத்துவமனையில் இருந்தாராம். அப்போது, அவா்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில், பிப்.9-ஆம் தேதி அந்த சிறுமியை சுகந்தி தனது வீட்டுக்கு வரவழைத்தாராம். அங்கு அந்தச் சிறுமியை குணா மிரட்டி பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுகந்தி, குணா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டா் கைது

பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் ரூ. 2.03 லட்சம், 2,600 அமெரிக்க டாலர் பறிமுதல்
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ராஜஸ்தானைச் சோ்ந்தவா் கைது
வீடியோக்கள்

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

