கடலூர்
போக்குவரத்து போலீஸாருக்கு தொப்பி, பழச்சாறு
சிதம்பரம், மே 9: கோடை காலத்தையொட்டி, சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு தொப்பி, கண்ணாடி, பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ஏஎஸ்பி பி.ரகுபதி போக்குவரத்து போலீஸாருக்கு தொப்பி, கண்ணாடி மற்றும் பழச்சாறு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
இதில், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் ஆா்.கலையரசன், உதவி ஆய்வாளா்கள் அருணாசலம், ஆனந்த், சட்டம் - ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் பரணிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.