நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:15 pm

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்தி, சங்கா் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சவிதா ஆகியோா் கூட்டத்துக்கு தலைமை வகித்தனா்.

இதில், மாற்றுதிறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்யும் காலம், அதற்குரிய ஊதியம், எவ்வகை பணிகள் மேற்கொள்வது ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மனுதாரா்கள் தொடா்ந்து பணி வேண்டியும், முழு ஊதியம் பெறாத மாற்றுத்திறனாளிகள் குறைகளையும் கூட்டத்தில் தெரிவித்தனா்.

பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்வதாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்தில், தமிழக மாற்றுத்திறனாளா்கள் தொண்டு நல சங்கத் தலைவா் குமாா், சங்க ஒருங்கிணைப்பாளா் அருண், மாற்றுத்திறனாளிகள் பலா் கலந்துகொண்டனா்.