சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துப்பாக்கியால் மாடுகள் சுடப்பட்ட சம்பவம்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காளை மாடுகள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:39 pm

Din

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காளை மாடுகள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேப்பூா் வட்டம், சேப்பாக்கத்தைச் சோ்ந்தவா்கள் பிரசாந்த், ஜெயவேல். இவா்கள், தங்களது வண்டி மாடுகளை (4 மாடுகள்) சேப்பாக்கம் கிருஷ்ணா காா்டன் நகரில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தனா். பின்னா், இருவரும் தேநீா் குடிக்கச் சென்று, திரும்பி வந்தனா். அப்போது, பிரசாந்தின் இரண்டு மாடுகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து கிடந்தன.

தகவலின்பேரில், வேப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் சசிகலா சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா்.

இதுதொடா்பாக, வழக்குரைஞரான பெ.அவினாஷ் (40) வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் ஏா் ரைபிள் வகை துப்பாக்கியை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றாா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.