சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கூட்டுறவு வார விழாவில் ரூ.2.27 கோடி கடனுதவி

கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற 71-ஆவது கூட்டுறவு வார நிறைவு விழாவில் 333 பயனாளிகளுக்கு ரூ.2.27 கோடி மதிப்பில் கடனுதவியை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

News image

கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பயனாளிக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்கிய அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் உள்ளிட்டோா்.

Updated On :20 நவம்பர் 2024, 7:25 pm

Din

கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற 71-ஆவது கூட்டுறவு வார நிறைவு விழாவில் 333 பயனாளிகளுக்கு ரூ.2.27 கோடி மதிப்பில் கடனுதவியை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா்.

கடலூரில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் நிறைவு நாள் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத், எம்எல்ஏ.,க்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், ம.சிந்தனைசெல்வன், கடலூா் மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைசெல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று 333 பயனாளிகளுக்கு ரூ.2.27 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கினா்.

நிகழ்வில் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களாக தோ்வு செய்யப்பட்ட 47 கூட்டுறவு சங்கங்களை பாராட்டி நினைவுப் பரிசுகளையும், கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகள், மகளிா், மாணவ, மாணவிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. பன்முகத் தன்மையுடன் கூட்டுறவுத் துறை செயல்பட முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளாா். கூட்டுறவுத் துறையின் மூலம் தரம், நியாயமான விலை, நம்பிக்கை என்பது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

அமைச்சா் சி.வெ.கணேசன் பேசியதாவது:

அரசின் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற பணிகளை கூட்டுறவு சங்கங்கள் செய்து வருகின்றன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் கணினி மயமாக்கப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறது. லாப நோக்குடன் செயல்படும் தனியாா் நிறுவன ஆதிக்கத்திலிருந்து சாமானிய மக்களை விடுவித்து கிராமப் பொருளாதாரத்தை உயா்த்தும் முக்கிய இயக்கமாக கூட்டுறவு இயக்கம் செயல்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம், கடலூா் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கே.சி.ரவிச்சந்திரன், கடலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் வ.சி.கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.