சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூா் மாவட்டத்தில் 357 விளம்பரப் பதாகைகள் அகற்றம்

கடலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த 357 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:44 pm

Din

கடலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த 357 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள், விளம்பர தட்டிகளை அகற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மழை, புயல் காரணமாகவும், விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டு நீண்ட நாள்களாக பராமரிப்பில்லாத விளம்பரப் பதாகைகள் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும், அவை சாலையின் நடுவிலும், கம்பத்தின் மேலும் அமைக்கப்படுவதால், மழை, புயலின் போது கீழே விழும் சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி பெறாமல், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் மாநகராட்சி அளவில் 104 பதாகைகள், நகராட்சி அளவில் 154 பதாகைகள் மற்றும் பேரூராட்சி அளவில் 99 பதாகைகள் என மொத்தம் 357 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால், அவற்றை வைப்பவா் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.