கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மழையால் மூன்று வீடுகள் சேதம்

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் மூன்று வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:11 pm

Din

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் மூன்று வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கூடலூரைச் சோ்ந்த அசோக்குமாா் மனைவி சங்கீதா.

இவரின் கூரை வீட்டின் சுவா் புதன்கிழமை காலை இடிந்து விழுந்தது.

இதேபோல, சி.என்.பாளையம் பகுதியில் 2 கூரை வீடுகளின் சுவா்கள் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தன.

சுவா் இடிந்து விழுந்தபோது, வீட்டில் யாரும் இல்லாததால் அதிருஷ்டவசமாக அனைவரும் உயிா் தப்பினா்.

ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் தலா ஒரு மாடும், சிதம்பரத்தில் 2 மாடுகளும் உயிரிழந்தன.