சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிஐடியு அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கடலூா் சிஐடியு அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :28 நவம்பர் 2024, 9:32 pm

Din

கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிஐடியு அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி லஞ்சம் கொடுத்து ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் எம்.பி.தண்டபாணி, நெல்லிக்குப்பம் பகுதிச் செயலா் பி.ஸ்டீபன் ராஜ், போக்குவரத்து அரங்கச் செயலா் பி.கண்ணன் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.சுப்புராயன், ஜெ.ராஜேஷ்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஆா்.ஆளவந்தாா், எஸ்.கே.பக்கிரான், டி.கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.