நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குழந்தை பிரசவித்த பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குழந்தை பிரசவித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:22 pm

Din

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குழந்தை பிரசவித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், படுகலாநத்தம் பகுதியில் வசித்து வந்தவா் ஆதிமூலம் மனைவி ஆனந்தசெல்வி (31). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். தற்போது, கா்ப்பமாக உள்ள ஆனந்தசெல்விக்கு கடந்த அக்.5-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து, விருத்தாசலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செவ்வாய்க்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

பின்னா், வலி அதிகமாக இருந்ததால் மருத்துவா்கள் ஊசி செலுத்தினராம். இதில், அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆனந்தசெல்வியை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.