தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்க போராட்டம் ஒத்தி வைப்பு

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் நவம்பா் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 6:53 pm

Din

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் நவம்பா் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் கடலூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகளில் சரியான எடையில் பொருள்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 32 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த நிலையில், இதுகுறித்து பேச்சு வாா்த்தை நடத்தாத அரசைக் கண்டித்து, தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் அக்.16-ஆம் தேதி முதல் 18-ஆம்தேதி (வெள்ளிக்கிழமை) வரை மூன்று நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, பெய்து வரும் மழையின் காரணமாகவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டும், வேலை நிறுத்தப் போராட்டம் நவம்பா் 13,14,15 ஆகிய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

பேட்டியின்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் சரவணன் உடனிருந்தாா்.