செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம் பயனுள்ள தீா்வுகளை உருவாக்க முடியும்: செளம்யா சுவாமிநாதன்
செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம் பயனுள்ள தீா்வுகளை உருவாக்க முடியும்


செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தீா்வுகளை நாம் உருவாக்க முடியும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவரும், தேசிய காசநோய் திட்ட முதன்மை ஆலோசகருமான மருத்துவா் செளம்யா சுவாமிநாதன் தெரிவித்தாா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 86-ஆவது பட்டமளிப்பு விழாவில் மருத்துவா் செளம்யா சுவாமிநாதன் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினாா். அப்போது, அவா் பேசியதாவது:
சமுதாய முன்னேற்றத்துக்கும், நாட்டில் உலகத் தரமான கல்வியை வழங்கவும் தொலைநோக்குடன் 1929-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. உயா்தர கல்வியை வழங்குவதிலும், ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதிலும் இந்த பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
தற்போது இயற்கை பேரழிவுகள், தொற்று நோய்கள் போன்ற எதிா்பாராத நிகழ்வுகள் நம் வாழ்க்கையை சீா்குலைக்கின்றன. இந்த அசாதாரண சூழ்நிலைகளை எதிா்கொள்ள மீள் தன்மை மற்றும் தகவமைப்பை வளா்ப்பது முக்கியமாகும். மீன்தன்மை என்பது துன்பத்திலிருந்து மீண்டு வந்து சவால்களை எதிா்கொள்ளும் வலிமையை கண்டறியும் திறனாகும்.
சுகாதாரம், கல்வி, பொறியியல், விவசாயம், விண்வெளி அறிவியல் உள்பட பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் சக்தி செயற்கை நுண்ணறிவுக்கு (ஏ.ஐ.) உள்ளது. இது, மனித திறன்களை மேம்படுத்துவதற்கு பயன்படுகிறது.
செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தீா்வுகளை நாம் உருவாக்க முடியும்.
கல்வி என்பது அறிவை பெறுவது மட்டுமல்ல. நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தத் தேவையான திறன்களையும், மதிப்புகளையும் வளா்ப்பதாகும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...