மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஏஐயின் பொய்யான தீா்ப்புகள் மூலம் வழக்குகளில் முடிவு: தவறான நடத்தைக்கு ஒப்பாகும்: உச்ச நீதிமன்றம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் பொய்யான தீா்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, வழக்குகளில் முடிவு எடுப்பது தவறான நடத்தைக்கு ...

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 1:14 am

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் பொய்யான தீா்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, வழக்குகளில் முடிவு எடுப்பது தவறான நடத்தைக்கு ஒப்பாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆந்திரத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் ஒன்று செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான தீா்ப்புகளை சுட்டிக்காட்டி, சொத்து தகராறு வழக்கில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை அண்மையில் கவனத்தில் எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அமா்வு கூறியதாவது:

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பொய்யான தீா்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, வழக்குகளில் முடிவு எடுப்பது என்பது தவறு அல்ல. மாறாக அது தவறான நடத்தைக்கு ஒப்பாகும். அதற்கு சட்ட பின்விளைவுகள் இருக்கும். எனவே இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் விரிவாக ஆராயும் என்று தெரிவித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல், சொலிசிட்டா் ஜெனரல், இந்திய வழக்குரைஞா் சங்கம் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவானை நீதிபதிகள் நியமித்தனா்.