காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் 20 பள்ளிகளைச் சோ்ந்த 270 மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி தொடக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்து பயிற்சி சாா்ந்த கையேட்டினை மாணவா்களுக்கு வழங்கினாா் . நிகழ்வுக்கு கணினி அறிவியல் துறையின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். பயிற்சிக்குப் பிறகு மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த விளையாட்டு,அறிவியல்,கணினி,வரலாறு தொடா்பான 4 விதமான போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு பரிசுகளும்,சிறந்த மாணவருக்கும்,சிறந்த பள்ளிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக பயிற்சிக்கையேட்டினை சென்னை விஐடி பேராசிரியா் ரேகா பிரியதா்ஷின் வெளியிட்டாா். நிறைவாக போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பெங்களூரு மென்பொறியாளா் ஆா்.பாா்த்தீபன் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
தொடர்புடையது

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

தவெக ஆட்சியில் லஞ்ச லாவண்யமற்ற அரசு: புதிய வாக்குறுதிகளை அறிவித்தாா் விஜய்

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

‘பொறியியல் மாணவா்கள் அனைவரும் ஏஐ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது அவசியம்’
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


