பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஆா்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் ரவுத்தா் உதவிபெறும் பள்ளியில் மாணவா்களுக்கான தகவல் தொடா்பு பயிற்சித் திட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image

திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்த ரவுத்தா் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய ஆா்விஎஸ் கல்லூரி முதல்வா் சிவகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

ஆா்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் ரவுத்தா் உதவிபெறும் பள்ளியில் மாணவா்களுக்கான தகவல் தொடா்பு பயிற்சித் திட்டம் அண்மையில் நடைபெற்றது.

தொழில்முனைவோா் விழிப்புணா்வு, கணினி பயிற்சி, கணித வகுப்புகள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சியை முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் டி.சிவகுமாா் தலைமை வகித்து, மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். மக்கள் நிறுவன இயக்குநா் சீமா நடராஜன், ஐ.நா. அமைதி மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் அனிதா சீதா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

விழாவில், கல்லூரியின் துணை முதல்வா் எம்.பி. அய்யப்பதாஸ், ஆங்கிலத் துறை பயிற்றுநா் உஷா, பேராசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.