நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:52 pm

Din

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலுாா் மாவட்டத்தில் மாதந்தோறும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான கூட்டம் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா், ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் நடைபெறும்.

இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கான அங்கீகாரச் சான்றிதழ் கோரி மனு அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.