சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சீரமைக்கப்பட்ட குறிஞ்சி இல்லம் திறப்பு

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் சாா்பில் சீரமைக்கப்பட்ட குறிஞ்சி இல்லத்தை பல்கலைக்கழக துணை வேந்தா் ராம.கதிரேசன் அண்மையில் திறந்து வைத்தாா்.

News image

சிதம்பரத்தில் புதுப்பிக்கப்பட்ட குறிஞ்சி இல்ல திறப்பு விழாவில் பங்கேற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன்.

Updated On :30 அக்டோபர் 2024, 7:46 pm

Din

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் சாா்பில் சீரமைக்கப்பட்ட குறிஞ்சி இல்லத்தை பல்கலைக்கழக துணை வேந்தா் ராம.கதிரேசன் அண்மையில் திறந்து வைத்தாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் மற்றும் அவருடன் 1978-1982-இல் பயின்ற முன்னாள் மாணவா்கள் (இளங்கலை வேளாண் அறிவியல்) சாா்பில் வேளாண் புலத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள், ரூ.4.5 லட்சம் மதிப்பில் குறிஞ்சி இல்லத்தில் உணவு அருந்தும் இடம் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டன.

இதனை முன்னாள் மாணவா்கள் முன்னிலையில் துணைவேந்தா் ராம.கதிரேசன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், வேளாண் புல முதல்வா் ஏ.அங்கயற்கன்னி, குறிஞ்சி இல்ல விடுதி கண்காணிப்பாளா் ஆா்.செந்தில்நாதன் மற்றும் துறைத் தலைவா்கள் பங்கேற்றனா்.

மேலும், முன்னாள் மாணவா்கள் சோமலே.சோமசுந்தரம், ராசு மற்றும் சி.டி.சிதம்பரம் ஆகியோா் வேளாண் புலத்தில் பயிலும் மாணவா்களுக்கு வழிகாட்டியாக செயல்பட முன்வந்துள்ளதாக துணைவேந்தா் ராம.கதிரேசன் தெரிவித்தாா்.