சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டத்தில் நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ்.அமிா்தராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:42 pm

Din

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டத்தில் நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ்.அமிா்தராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் வட்டத்தில் சம்பா பருவத்தில் 23,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள ஒரு சில பகுதிகளில் தற்போது நிலவும் தட்ப வெப்ப நிலையால் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்திட தேவைக்கு அதிகமாக உரங்கள் இடுவதை தவிா்த்து, வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைப்பதுடன், புற்களை நீக்கவேண்டும். மேலும், வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவீதம் ஆகியவைகளை தெளிக்க வேண்டும்.

பொருளாதார சேத நிலையான, தழைப்பருவத்தில் 10 சதவீதத்துக்கு மேல் இலைச்சேதமும், பூ பருவத்தில் 5 சதவீதத்துக்கு மேல் கண்ணாடி இலை சேதமும் ஏற்பட்டால், ஏக்கருக்கு காா்டாப்ஹைட்ரோ குளோரைடு 50 எஸ்.பி. என்ற மருந்தை 400 கிராம் அல்லது குளோரான்ட்ரான லிபுரோல் 18.5 எஸ்.சி. மருந்து 60 மில்லியை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம், இலைச்சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.