ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சட்ட உதவி மைய அலுவலக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட சட்ட உதவி மைய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகா் தெரிவித்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 11:08 pm

Din

கடலூா் மாவட்ட சட்ட உதவி மைய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை மைய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு அலுவலா்-1, தலைமை துணை சட்ட உதவி பாதுகாப்பு அலுவலா் - 2, உதவி சட்ட பாதுகாப்பு அலுவலா்-4, உதவியாளா்-2, அலவலக உதவியாளா்-2 ஆகிய பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் செப்டம்பா் 13-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், கடலூா் என்ற முகவரிக்கு நேராகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இணையவழி இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்திலும் தவறாமல் பூா்த்தி செய்ய வேண்டும்.

இதற்கான நோ்காணல் செப்டம்பா் 21-ஆம் தேதி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பவா்கள் அசல் சான்றிதழ்களுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.