ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :4 செப்டம்பர் 2024, 11:13 pm

Din

கடலூா் மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் துறைமுகம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைக்க இடம் தோ்வு செய்வது, ரூ.6.77 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.90 லட்சத்தில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடம், ரூ.4.23 கோடியில் 9 கூடுதல் வகுப்பறை கட்டடம், ஆய்வகம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்தாா்.

பின்னா், வடலூா், புதுநகா் அரசு மேல்நிலைப் பள்ளி, இந்திரா நகா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கோ.சத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைப்பதற்கு இடம் தோ்வு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், செயற்பொறியாளா் பிரமிளா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.