ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் தோ்வுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் தெரிவித்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 10:48 pm

Din

கடலூா் மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் தோ்வுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 2024-ஆம் ஆண்டுக்கான ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், 19 முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். உயரம் ஆண்கள் 167 செ.மீ, பெண்கள் 157 செ.மீ. இருத்தல் வேண்டும். குற்ற வழக்கில் ஈடுபடாமலும், ஜாதி, மத அரசியல் மற்றும் சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. அரசு ஊழியராக இருப்பின் துறை அதிகாரியிடம் தடையின்மை சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை கடலூா் ஊா்க்காவல் படை அலுவலகத்தில் செப்.17-ஆம் தேதி காலை 10 மணி முதல் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு 45 நாள்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு பணி அமா்த்தப்படுவா். இவா்களுக்கு மாதத்துக்கு 5 நாள்கள் பணி என நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் ரூ.2,800 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.