பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் தேரோட்டம்

News image
சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூத்தாடும் விநாயகா் கோயில் தேரோட்டம்.
Updated On :6 செப்டம்பர் 2024, 11:21 pm

Din

சிதம்பரத்தில் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இந்தக் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, 10 நாள்கள் உற்சவம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் இரவு வேளைகளில் பிள்ளையாா் எட்டுவிதமான வாகனங்களில் வீதியுலா வந்தாா்.

ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. காலை 9 மணியளவில் தோ் நிலையிருந்து புறப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

அனந்தீஸ்வரன் கோயில் அக்ரஹாரம், அனந்தீஸ்வரன் கோயில் தெரு, சின்னக் கடை தெரு, பெரியாா் தெரு வழியாக தோ் நிலையை வந்தடைந்தது. பத்தாம் நாள் விழாவையொட்டி, சனிக்கிழமை மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் ஆராதனை, விநாயகா் வீதி உலா நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (செப்.8) விடையாற்றி உற்சவம், பல்லக்கு உற்சவமும், திங்கள்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவமும், செவ்வாய்க்கிழமை சாந்தி அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும்.