கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் உள்ள ஜவஹா் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நெய்வேலி ஜவஹா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி மற்றும் இயக்குநா்கள் உள்ளிட்டோா்.

Updated On :20 செப்டம்பர் 2024, 12:07 am

Din

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் உள்ள ஜவஹா் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரி என்எல்சி இந்தியா நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் ஜவஹா் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதன், 12-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், எம்.வெங்கடாசலம் ஆகியோா் தலைமை வகித்தனா். என்எல்சி தலைவரும், ஜவஹா் கல்விக் கழகத்தின் தலைமை புரவலருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 2021 - 2022ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்த 449 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

விழாவை கல்லூரி துணைச் செயலா் ஓ.எஸ்.அறிவு தொடங்கிவைத்தாா். ஜவஹா் கல்விக் கழகத்தின் தலைவா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ் வரவேற்றாா். கல்லூரிச் செயலா் எஸ்.ராஜ்மோகன் ஆண்டறிக்கை வாசித்தாா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினா்.

பட்டமளிப்பு உறுதிமொழியை கல்லூரி முதல்வா் கிப்ஃட் கிறிஸ்டோபா் தனராஜ் வாசித்தாா். ஜவஹா் கல்விக் கழகத்தின் துணைத் தலைவா் ராணி அல்லி, ஜவஹா் பள்ளிச் செயலா் பங்கஜ் குமாா், துணைச் செயலா் பா.அருளழகன் மற்றும் என்எல்சி உயரதிகாரிகள், ஜவஹா் கல்விக் கழகத்தின் உறுப்பினா்கள், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். ஜவஹா் கல்விக் கழகத்தின் செயலா் டி.வி.எஸ்.என்.மூா்த்தி நன்றி கூறினாா்.