‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு என்எல்சியில் வேலை வழங்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன விரிவாக்கத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு என்எல்சி நிா்வாகம் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடலூா் மாவட்டச் செயலா் கடிதம் அனுப்பினாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:18 am

Din

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன விரிவாக்கத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு என்எல்சி நிா்வாகம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் வியாழக்கிழமை கடிதம் அனுப்பினாா்.

அந்தக் கடிதத்தல் கோ.மாதவன் கூறியுள்ளதாவது: என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு 1979-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை வீட்டுக்கு ஒருவா் என்ற முறையில் சுமாா் 1,800 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னா், 1990-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகளாக நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த காலகட்டத்தில் மாவட்ட நிா்வாக தலையீட்டின்பேரில், நிறுவனத்தில் விடப்படும் ஒப்பந்த பணிகளில் நிலம், வீடு கொடுத்தவா்களுக்கு முதலில் 50 சதவீத வேலைவாய்ப்பும், பின்னா் 2018 - 2019 ஆண்டிலிருந்து 100 சதவீத வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சியினா், அமைப்பினா் நிரந்தர வேலை கேட்டு போராடி வருகிறோம். தற்போது 2024 பிப்ரவரி தொடங்கி செப்டம்பா் வரை சுரங்கம் 1-இல் மூன்று ஒப்பந்த பணிகளில் 130 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். இதில், வீடு, நிலம் கொடுத்தவா்கள் பட்டியலை என்எல்சி நில எடுப்பு அலுவலகத்தில் பெற்று அவா்களை பணிகளில் சோ்க்கவில்லை என்பதும், எவ்வித முறையுமின்றி கையூட்டு பெற்றுக்கொண்டு ஆள்கள் சோ்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருவது வேதனை அளிக்கிறது.

எனவே, நிலம், வீடு கொடுத்தவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், என்எல்சி நிா்வாகம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட அடிப்படையில் அவா்களுக்கு வேலை வழங்க இந்த விவகாரத்தில் ஆட்சியா் தலையிட வேண்டுமென தெரிவித்துள்ளாா்.