அண்ணாமலை நகரில் 36 மி.மீ. மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 36 மி.மீ. மழை பதிவானது.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 36 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: சிதம்பரம் 26, பரங்கிப்பேட்டை 25.4, சேத்தியாத்தோப்பு 19.2, புவனகிரி 19, குடிதாங்கி 15, லால்பேட்டை 13, ஆட்சியா் அலுவலகம் 12.3, கடலூா் 11.7, கொத்தவாச்சேரி, காட்டுமன்னாா்கோவில் தலா 11, வானமாதேவி 10, வடக்குத்து 7, பண்ருட்டி 6, தொழுதூா் 5.6, குறிஞ்சிப்பாடி 5, குப்பநத்தம் 3.2, ஸ்ரீமுஷ்ணம் 3.1, விருத்தாசலம் 3, பெலாந்துறை 2.1, கீழச்செருவாய் 1 மி.மீ மழை பதிவானது.

X
Dinamani
www.dinamani.com