மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பால் வேன் மோதி ஒருவா் உயிரிழப்பு

பண்ருட்டி அருகே பால் வேன் மோதியதில் பைக்கில் சென்ற ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

பண்ருட்டி அருகே பால் வேன் மோதியதில் பைக்கில் சென்ற ஒருவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (47). கட்டடங்களுக்கு டைல்ஸ் அமைக்கும் மேஸ்திரியான இவா், ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக செவ்வாய்க்கிழமை காலையில் மாலை அணிந்து உள்ளாா்.

இந்த நிலையில், அய்யனாா் தனது பைக்கில் அதே ஊரைச் சோ்ந்த பூபதி என்பவருடன் வேலைக்காக செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த பால் வேன் மோதியதில் பைக்கில் இருந்து விழுந்த அய்யனாா் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

அவருடன் வந்த பூபதி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸாா், அய்யனாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் விபத்து தொடா்பாக புதுப்பேட்டை போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.