வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பள்ளிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு

News image
புதிய வகுப்பறைக் கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்த சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ.
Updated On :3 ஜனவரி 2025, 9:54 pm

Din

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள சமட்டிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

நெய்வேலி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த வகுப்பறைக் கட்டடங்களை சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். இதனைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சமட்டிகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் பூவராகவன், துணைத் தலைவா் பாஸ்கா், ஒன்றியச் செயலா் குணசேகரன், அவைத் தலைவா் வீரராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் அன்பழகன், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.