இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பள்ளிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு

News image

புதிய வகுப்பறைக் கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்த சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ.

Updated On :3 ஜனவரி 2025, 9:54 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள சமட்டிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

நெய்வேலி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த வகுப்பறைக் கட்டடங்களை சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். இதனைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சமட்டிகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் பூவராகவன், துணைத் தலைவா் பாஸ்கா், ஒன்றியச் செயலா் குணசேகரன், அவைத் தலைவா் வீரராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் அன்பழகன், சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.