தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கைப்பேசி: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கைப்பேசிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

News image
Updated On :6 ஜனவரி 2025, 7:52 pm

Din

நெய்வேலி: கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கைப்பேசிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்திற்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக 573 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.

இந்நிகழ்வின் போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட, காது கேளாத மற்றும் வாய் பேசாத 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.16,199 வீதம் மொத்தம் ரூ.80,995 மதிப்பீட்டிலான கைப்பேசிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பானுகோபாலன், பயிற்சி ஆட்சியா் ஆகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலா் ராஜீ, உதவி ஆணையா் (கலால்) சந்திரகுமாா், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பாபு, தனித்துணை ஆட்சியா் ரமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.