நெய்வேலி: கடலூா் அருகே காா் மீது அரசு சொகுசுப் பேருந்து மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்னை நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டு சென்றது. செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் திருப்பாதிரிப்புலியூா் மோகினி பாலம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த காா் மீது சொகுசுப் பேருந்து மோதியது.
இதில், காா் ஓட்டுநா் மற்றும் 5 பயணிகள் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காா், சொகுசுப் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

காா் மீது பேருந்து மோதல்: மூவா் பலத்த காயம்

ஓட்டுநா் மயக்கம்: விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

