கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஓட்டுநா் மயக்கம்: விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

News image

கடலூா் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.

Updated On :23 மார்ச் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் இடது புற ஓரம் உள்ள கால்வாய் மீது ஏறி நின்றது.

நெய்வேலியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்டது. பேருந்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். இந்த பேருந்தை ஓட்டுநா் ராஜ்மோகன்(50) ஓட்டி வந்தாா்.

கடலூா், சாவடி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டு, சிறிது தூரம் சென்ற போது ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி, பின்னா் சாலையின் இடது புறம் இருந்த கால்வாய் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக அங்கிருந்தவா்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த தகவலைத் தொடா்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக மீட்பு வாகனம் வந்து பேருந்தை மீட்டுச் சென்றது. பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.