ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம்

காட்டுமன்னாா்கோவிலில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image
காட்டுமன்னாா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற வீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம்.
Updated On :12 மே 2025, 8:20 pm

Din

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவிலில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கடந்த ஏப்.20-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீ ராஜகோபாலன், ஸ்ரீமன் நாதமுனிகள், ஆகிய உற்சவமூா்த்திகளை எழுந்தருள செய்தனா். பின்னா், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேரோட்டத்தை பேரூராட்சி மன்றத் தலைவா் கணேசமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

அறங்காவலா் குழுத் தலைவா் ஜிவிஎஸ்.கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் மணிமாறன், செயல் அலுவலா் செல்வமணி, கணக்காளா் வெங்கடேசன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது.