இப்பூங்கா எழில்மிகு நுழைவாயிலுடன் பல்வேறு வகையான கண்ணைக் கவரும் வண்ண மலா் தோட்டங்கள், மான், மயில் போன்ற அழகிய செடி சிற்பங்களை உள்ளடக்கிய பாறைத் தோட்டம், இயற்கை பிண்ணனியுடன் கூடிய இசைத் தோட்டம் மற்றும் பல்வேறு சிற்பங்களுடன் கூடிய பாதுகாப்பான சிறுவா் விளையாடும் அம்சங்களுடன் அமையவுள்ளது. மேலும், பூங்காவில் இயற்கை குளிா்ச்சியுடன் கூடிய நடைபாதை, நீா்வீழ்ச்சியுடன் கூடிய குளங்கள் மற்றும் இசை நீருற்று ஆகியன பாா்வையாளா்களை கவரும் வண்ணம் அமையவுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிறுவா்கள் கண்டுகளிக்கும் பொருட்டு பல்வேறு வகையான பறவைகள் கூடம் அமையவுள்ளது. சுற்றுச்சூழலை காத்தல், சூழலியல் குறித்த கற்றல், மக்களை இயற்கையோடு இணைத்தல் ஆகியவற்றினை நோக்கமாக கொண்டு மருதம் பூங்கா அமைக்கப்படவுள்ளது. தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.