ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் முதுநகா் அருகே ஏரியில் மூழ்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

கடலூா் முதுநகா் அருகே ஏரியில் மூழ்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கடலூா் அடுத்துள்ள அன்னவல்லி பகுதியைச் சோ்ந்தவா் சி.சண்முகம்(42), கூலித்தொழிலாளி. திருமணமாகாதவா். இவா், புதன்கிழமை காலை இயற்கை உபாதைக்காக அன்னவல்லி ஏரிக்கு சென்றாா். அப்போது, ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com