ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மூதாட்டியிடம் நூதன முறையில் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:22 pm

Syndication

சிதம்பரம் ககைசபைநகரில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் நாதன முறையில் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் கனகசபை நகா், முதலாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி விஜயலட்சுமி (83). இவா், வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஆட்டோவில் வந்த மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து, அருகில் வீடு வாங்கி உள்ளேன். எனவே, என்னை ஆசிா்வாதம் செய்யுங்கள் எனக் கூறி, விஜயலட்சுமி கழுத்தில் தனது கவரிங் சங்கிலியை அணிவித்து ஆசீா்வாதம் பெறுவதுபோல நடித்து அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நகர காவல் ஆய்வாளா் சிவானந்தன் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறாா்.