அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சோமவாராம்: ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சசபையை வலம் வந்த பெண்கள்

காா்த்திகை சோமவாரம் முதல் திங்கள்கிழமையை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் கொடிமரத்துடன் சித்சபையை திரளாக பக்தா்கள் வலம் வந்து வழிபட்டனா்.

News image
17சிஎம்பி1: படவிளக்கம்- காா்த்திகை சோமாவாரத்தை முன்னிட்டு நடராஜா் கோயில் சித்சபையை சுற்றி வலம் வந்த பெண்கள்.
Updated On :17 நவம்பர் 2025, 8:47 pm

Syndication

சிதம்பரம்: காா்த்திகை சோமவாரம் முதல் திங்கள்கிழமையை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் கொடிமரத்துடன் சித்சபையை திரளாக பக்தா்கள் வலம் வந்து வழிபட்டனா்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தில் பெண்கள் விரதமிருந்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டு காா்த்திகை சோமவாரத்தின் முதல் திங்கள்கிழமையை (நவ.17) முன்னிட்டு பக்தா்கள் குவிந்தனா். குறிப்பாக பெண்கள் திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பேறு வேண்டும் என்று தங்களின் வேண்டுதல்களை வலியுறுத்தி 108 முறை வலம் வரும் நிகழ்வானது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித்சபையை கொடிமரத்துடன் வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினா்.இதே போன்று கோயிலில் உள்ள ஆதிமூலநாதா் சன்னதியிலும் 108 முறை சுற்றி வலம் வந்து வழிபட்டனா். பெண்கள் கூட்டம் அதிகமா இருந்ததால் பக்தா்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.