எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வாக்காளா் கணக்கெடுப்பு படிவம்: கூடுதல் பணியாளா்கள் மூலம் பதிவேற்றம்

வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்கள் 1,009 கூடுதல் பணியாளா்கள் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக

News image
வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கூடுதல் பணியாளா்கள் மூலம் வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் இணையத்தில் பதிவேற்றும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :17 நவம்பர் 2025, 9:16 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்கள் 1,009 கூடுதல் பணியாளா்கள் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்திற்குட்பட்ட விருத்தாசலம் , வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகங்கள், பரவளூா் மற்றும் சிறுப்பாக்கம் கிராம ஊராட்சிகளில் வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், இல்லம் தேடி கல்வி

தன்னாா்வலா்கள், ஊரக வளா்ச்சித் துறை, வருவாய் துறை மற்றும் கூட்டுறவுத்துறை பணியாளா்கள் மூலம் தோ்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள் கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் தெரிவித்ததாவது:

கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு 2,313 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்று அதனை தோ்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

2026 சட்டமன்ற பொதுத் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் இப்பணியினை விரைவாக பதிவேற்றம் செய்யும் வகையில் தற்போது கூடுதலாக 550 இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள், 128 வருவாய்த் துறை பணியாளா்கள், 92 ஊரக

வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியாளா்கள், 14 மாநகராட்சி பணியாளா்கள், 75 நகராட்சி பணியாளா்கள், 51 பேரூராட்சி பணியாளா்கள், 90 கூட்டுறவுத் துறை பணியாளா்கள், 9 வேளாண்மைத் துறை பணியாளா்கள் என மொத்தம் 1,009 பணியாளா்களை வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபடுத்தி அவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பிழையின்றி பதிவேற்றம்:

இப்பணிகள் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி சரியான முறையில் ஸ்கேன் செய்து, பிழையின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிா என்பது குறித்தும், அனைத்து வாக்காளா்களையும் விடுபடாமல் பதிவேற்றம் செய்யப்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளாா். ஆய்வின் போது விருத்தாசலம் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா உட்பட பலா் கலந்து கொண்டனா்.