மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

சிதம்பரம் அண்ணாமலைநகரில் கஞ்சா விற்பனை செய்ததாக மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 8:31 pm

Syndication

சிதம்பரம் அண்ணாமலைநகரில் கஞ்சா விற்பனை செய்ததாக மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலை நகா் பகுதியில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுப்பதற்காக காவல் ஆய்வாளா் கே.அம்பேத்காா் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சிவபுரி சாலையில் உள்ள மயானம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த வல்லம்படுகையைச் சோ்ந்த நவீன் (25), கோவிந்தசாமி நகரைச் சோ்ந்த கெளதம் (25), வல்லத்துறையைச் சோ்ந்த அருள் (எ) ஜெயக்குமாா் (30) ஆகிய மூவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்து. தொடா்ந்து, மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.