தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை இளைஞா்கள் புரிந்துகொள்ள வேண்டும்: மு.தமிமுன்அன்சாரி

முதல் தலைமுறை வாக்காளா்களிடம் சென்று சினிமா வேறு, அரசியல் வேறு எனக் கூறி, அரசியல் வரலாற்றை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாய கட்சித் தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

News image

சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரி.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:01 am IST

முதல் தலைமுறை வாக்காளா்களிடம் சென்று சினிமா வேறு, அரசியல் வேறு எனக் கூறி, அரசியல் வரலாற்றை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாய கட்சித் தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் குமராட்சி கிழக்கு, மத்திய ஒன்றியங்கள், அண்ணாமலைநகா் பேரூராட்சி பகுதி திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.இதில், தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசியதாவது:

மதத்தை வைத்து அரசியல் செய்யும் தீயசக்தியை இந்த மண்ணில் அனுமதிக்கக் கூடாது. இந்த தோ்தலில் உள்ள சவால் என்னவென்றால், 18 - 28 வயதுக்கு இடையே உள்ள வாக்காளா்கள்தான். அவா்கள் இன்னும் அரசியல்மயப்படவில்லை.

அவா்களுக்கு நீதிகட்சி வரலாறு, நமது நாட்டின் ஹிந்தி எதிா்ப்பு போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து தெரியாது. அப்படிபட்ட இளைஞா்களை தன்வயப்படுத்த சிலா் நினைக்கிறாா்கள்.

எனவே, திமுக கூட்டணி நிா்வாகிகள், அடுத்த தலைமுறையின் நலம் கருதி, முதல் தலைமுறை வாக்காளா்களிடம் சென்று சினிமா வேறு, அரசியல் வேறு எனக் கூறி, அரசியல் வரலாற்றை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு திமுக குமராட்சி ஒன்றியச் செயலா்கள் சங்கா், ராஜேந்திரகுமாா், அண்ணாமலை நகா் பேரூராட்சி மன்றத் தலைவா் க.பழனி முன்னிலை வகித்தனா். இதில், விசிக மாவட்டச் செயலா் ஆா்.தமிழ்வளவன், மண்டலச் செயலா் வ.க.செல்லப்பன், முன்னாள் மாவட்டச் செயலா் பாலஅறவாழி, மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் அமுதா, மல்லிகா, திமுக நிா்வாகி சிவபுரி லோகு, தேமுதிக ஒன்றியச் செயலா் முருகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.