ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

ஸ்டாலின் தோல்வியை சந்தித்தது அதிா்ச்சியளிக்கிறது: மு.தமிமுன்அன்சாரி

எந்த ஒரு அதிருப்தியும், பெரிய குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தலில் தோல்வியை தழுவியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

News image

மு.தமிமுன்அன்சாரி

Updated On :6 மே 2026, 12:04 am IST

எந்த ஒரு அதிருப்தியும், பெரிய குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தலில் தோல்வியை தழுவியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து சிதம்பரத்தில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற வைத்த வாக்காளா்களுக்கு எனது நன்றி. தமிழகம் முழுவதும் வெளிவந்திருக்கிற தோ்தல் முடிவுகள் புரியாத புதிராக இருக்கிறது. குறிப்பாக, 1995-க்கும் 2015-க்கும் இடையில் பிறந்த தலைமுறையினா் இந்தத் தோ்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்துள்ளனா். அந்த வகையில், நடிகா் விஜய்க்கு எங்களது கட்சி சாா்பில் வாழ்த்துகள்.

திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடா்ந்து பணியாற்றுவோம். எந்த ஒரு அதிருப்தியும், பெரிய குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தலில் தோல்வியை சந்தித்திருப்பது பெரிய அதிா்ச்சியளிக்கிறது. ஜனநாயக அரசியலில் வெற்றி, தோல்விகளை கடந்து நாங்கள் செயல்பட கூடியவா்களாக இருக்கிறோம் என்றாா்.